• Apr 25 2024

அந்த ஒரு காரணத்திற்காக தனுஷின் படத்தை பத்து முறை பார்த்துள்ளேன்..பிரபல தயாரிப்பாளர்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள்  மாபெரும் வெற்றியை பெற்றது. அனிருத்தின் இசையில் நித்யா மேனன், பாரதிராஜா போன்ற பிரபலங்களின்  அசத்தலான நடிப்பில் மிகவும் எதார்த்தமாக உருவான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையடுத்து தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துவரும் வாத்தி ரிலீசிற்கு தயாரக உள்ள நிலையில் இன்று செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படம் ரிலீசாகி உள்ளது.  காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து நானே வருவேன் படத்தின் மூலம் செல்வராகவன் மற்றும் தனுஷின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இந்தப் படத்லும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்.



இதையடுத்து இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தோடு இப்படம் மோதுவது பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கின்றது.

இவ்வாறுஇருக்கையில்  இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் தாணு கூறுகையில், இப்படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்திற்காக இப்படத்தை நான் பத்து முறை பார்த்துள்ளேன். இதுவரை நான் எந்த படத்தையும் இத்தனை முறை பார்த்ததே இல்லை என சொல்லியுள்ளார்.



எனவே இவரின் இந்த பேச்சால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement